பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த போதை நபர்: ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அட்டகாசம்

  • IndiaGlitz, [Saturday,September 01 2018]

நியூயார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றில் பயணம் செய்த போதை ஆசாமி ஒருவர் தனக்கு முன்பாக அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் தனது டுவிட்டரில் கடுமையான ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். 'ஆகஸ்டு 30 அன்று AI102 ஜேஎப்கே விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அதில் என் தாயார் இருக்கை எண்.36டி பயணம் செய்துகொண்டிருந்தார். இரவு உணவு சேவைக்குப் பிறகு அவர் ஒரு உச்சபட்ச அதிர்ச்சியை சந்தித்தார். அவரது இருக்கை முழுவதும் சரிந்தது, தனது பேன்ட்டை அகற்றி என் தாயார் இருக்கையின்மீது சிறுநீர் கழித்துள்ளார். தயவுசெய்து இப்பிரச்சினையை உடனடியாக கவனிக்கவும்' என்று பதிவு செய்ததோடு அவர் இந்த டுவீட்டை விமானத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபுவின் டுவிட்டர் பக்கத்திற்கும் பகிர்ந்துள்ளார்.

இந்த டுவீட்டால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து 'ஏர் இந்தியா தயவுசெய்து இச்சம்பவம் குறித்தும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுவிவரத்தையும் விமான போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை தலைமை இயக்குநர் ஆகியோர்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்கவும் என்று விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உத்தரவிட்டார். .மேலும் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளிடம், 'தங்கள் தாயார் இந்த மோசமான அனுபவத்திற்கு ஆளானது மிகவும் துரதிஷ்டவசமானது.' என்றும் கூறியுள்ளார்.

More News

கமலிடம் சாட்டையடி கேள்வி கேட்ட ரித்விகா

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் பிக்பாஸ் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஜப்தி செய்ய வேண்டிய நிலை வரும்: சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

வாங்கிய முன்பணத்தை திருப்பி தராவிட்டால் சிம்புவின் கார் முதல் செல்போன் வரை அனைத்தையும் ஜப்தி செய்ய வேண்டிய நிலை வரும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை நாம் நமது வாசகர்களுக்கு கிட்டத்தட்ட சரியாக தெரிவித்தோம்.

பிரபல நடிகரின் பிணத்துடன் செல்பி எடுத்த நர்ஸ்கள் பணிநீக்கம்

சமீபத்தில் சாலைவிபத்தில் முன்னாள் ஆந்திர முதல்வரின் மகனும், பிரபல நடிகரும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமூரி ஹரிகிருஷ்ணா மரணம் அடைந்தார்.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'தலைவர் 165'