close
Choose your channels

பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த போதை நபர்: ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அட்டகாசம்

Saturday, September 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நியூயார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றில் பயணம் செய்த போதை ஆசாமி ஒருவர் தனக்கு முன்பாக அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் தனது டுவிட்டரில் கடுமையான ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். 'ஆகஸ்டு 30 அன்று AI102 ஜேஎப்கே விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அதில் என் தாயார் இருக்கை எண்.36டி பயணம் செய்துகொண்டிருந்தார். இரவு உணவு சேவைக்குப் பிறகு அவர் ஒரு உச்சபட்ச அதிர்ச்சியை சந்தித்தார். அவரது இருக்கை முழுவதும் சரிந்தது, தனது பேன்ட்டை அகற்றி என் தாயார் இருக்கையின்மீது சிறுநீர் கழித்துள்ளார். தயவுசெய்து இப்பிரச்சினையை உடனடியாக கவனிக்கவும்' என்று பதிவு செய்ததோடு அவர் இந்த டுவீட்டை விமானத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபுவின் டுவிட்டர் பக்கத்திற்கும் பகிர்ந்துள்ளார்.

இந்த டுவீட்டால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து 'ஏர் இந்தியா தயவுசெய்து இச்சம்பவம் குறித்தும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுவிவரத்தையும் விமான போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை தலைமை இயக்குநர் ஆகியோர்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்கவும் என்று விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உத்தரவிட்டார். .மேலும் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளிடம், 'தங்கள் தாயார் இந்த மோசமான அனுபவத்திற்கு ஆளானது மிகவும் துரதிஷ்டவசமானது.' என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.