close
Choose your channels

என்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு!

Monday, June 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், தென்னாபிரிக்க வீரருமான டுப்லஸ்ஸிஸ் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டுப்லஸ்ஸிஸ் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஒரு அம்மாவாக ஒரு மனைவியாக நான் அவருக்கு காயம் ஏற்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்த போது என்னை கொன்றுவிட்ட தருணம் போல் உணர்ந்தேன். அவருக்கு என்ன ஆயிற்று என்பதை மற்றவர்களுக்கு தெரிந்த அளவு தான் எனக்கும் தெரிந்துள்ளது. காயம் அடைந்த போது வீடியோவில் காட்டப்பட்ட அவரது முகத்தை பார்க்கும்போது அவர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருப்பார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவருக்கு உண்மையில் என்ன ஆயிற்று என்பது குறித்து சரியான தகவல் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு சிலர் அவர் நினைவு இல்லாமல் இருப்பதாகவும் கூறுவது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல எந்த ஒரு விளையாட்டு வீரர்களுக்கும் காயம் அடைந்தால் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகுந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. எல்லோரும் அவர் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனை செய்யுங்கள்’ டூபிளசிஸ் மனைவி உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.