டப்பிங் கலைஞர்களின் தேசிய விருது கோரிக்கை: மத்திய அரசு ஏற்குமா?

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சண்டைப்பயிற்சி இயக்குனர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்ற ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்று இந்த வருடம் முதல் சண்டைப்பயிற்சிக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. இதன் முதல் விருதை 'புலிமுருகன்' படத்திற்கு சிறப்பாக சண்டைப்பயிற்சி அமைத்த பீட்டர் ஹெய்ன் பெற்றார்.
இந்த நிலையில் டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞர்கள் தங்களுக்கும் தேசிய விருது வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் கே.ஆர். செல்வராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கம் 1,600-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. பாரம்பரியமான இச்சங்கத்தில் பழம் பெரும் கலைஞர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் இதுவரை டப்பிங் கலைஞர்களுக்கு இடமில்லை. பின்னணி குரல் கலைஞர்களுக்கு இதுவரை தேசிய அங்கீகாரம் எதுவும் இல்லை. அடையாளம் காணப்படாமலேயே பல கலைஞர்கள் மறைந்து விட்டனர். அதனால் இனி வரும் காலங்களில் தேசிய விருது பட்டியலில் எங்களுக்கும் இடமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இதுவரையில் சண்டை பயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தாண்டு அந்த துறைக்கும் தேசிய விருது வழங்கும் முறையைக் கொண்டு வந்து விட்டார்கள். அது போல் டப்பிங் கலைஞர்களுக்கும் இடமளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. டப்பிங் கலைஞர்களின் கோரிக்கைய ஏற்று அடுத்த ஆண்டு முதல் விருது வழங்க மத்திய அரசு முன்வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்? ஜோதிகா ஆவேசம்

ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் பாடல்கள் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெளியானது.

பி.பி.ஓ வேலையைவிட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம். டெல்லி இளைஞரின் புதிய அனுபவம்

இந்திய தலைநகர் டெல்லியில் பி.பி.ஓ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர் தினமும் அலுவலகம் செல்லும்போது ஏராளமான பிச்சைக்காரர்களை பார்த்துள்ளார்...

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' படத்தில் கார்த்தி?

பிரபல நடிகை ஜோதிகா நடித்து முடித்துள்ள 'மகளிர் மட்டும்' படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் மிகச்சிறப்பாக வெளியானது. முதல்கட்ட விமர்சனத்தில் ஜிப்ரானின் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

ரூ.20 கோடி மோசடியா? தீபாவிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரீசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஜெ.தீபா. இவரது வீட்டின் முன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொண்டர்கள் குவிந்ததை அனைவரும் அறிவர்...

உதவி இயக்குனராக மாறிய நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'மாயா', 'டோரா'வை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு நாயகி சப்ஜெக்ட் திரைப்படம் 'அறம்'...