close
Choose your channels

இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை: பெரும் பரபரப்பு..!

Tuesday, April 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூபாய் 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட இயக்குனர் அமீர் சமீபத்தில் டெல்லி சென்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரானார் என்பதும் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரான சில நாட்களில் இயக்குனர் அமீருக்கு சொந்தமான இடங்களில் இன்று திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தி நகர் அமீர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை நடைபெறுவதாகவும் இந்த கார்டன் இல்லத்தை இயக்குனர் அமீர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய அமீர் வீட்டுக்கு சென்ற போது அவருடைய வீடு பூட்டி இருந்ததாகவும் அதன் பிறகு 10 நிமிடங்கள் காத்திருந்து அமீர் வந்தவுடன் சோதனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அமீர் அலுவலகம் மட்டுமின்றி இன்று காலை 7 மணி முதல் சென்னை முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.