திமுக எம்.பி.கௌதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்… விதிமுறைகளைமீறி வருவாய் ஈட்டியதால் நடவடிக்கை!!!

  • IndiaGlitz, [Saturday,October 17 2020]

 

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி. கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இன்றி வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவாய் ஈட்டியதால் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்னிய செலவாணி சட்டத்தின் கீழ் கௌதம சிகாமணியின் சொத்துகளை முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கௌதம சிகாமணி முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வெளிநாடுகளில் செய்த முதலீட்டின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.7.05 கோடியை மறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அமலாக்கத் துறையினர் இவரின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் கௌதம சிகாமணிக்கு சொந்தமாக தமிழகத்தில் உள்ள அசையாத சொத்துக்களான வேளாண் நிலங்கள், வணிக மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் அசையும் சொத்துக்களான வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் உள்பட ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துகள், அன்னிய செலவாணி சட்டத்தின் கீழ் முடக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

More News

கமல் தெரிவித்த மீன் கதை: ரேகா, சனம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நிகழ்ச்சி என்பதால் காரசாரமான விவாதங்கள் மற்றும்  சுவாரசியமான காட்சிகள்

'அர்ச்சனா ஒரு பெரிய தலைவலி' என கூறிய போட்டியாளர் யார்?

சமீபத்தில் வைல்டுகார்ட் போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனா மற்ற போட்டியாளர்களுக்கு சவாலான போட்டியாக இருப்பார் என கருதப்படுகிறது.

உள்ளேயும் முகமூடி விழ ஆரம்பிச்சிருச்சு: கமல்ஹாசன்

பிக்பாஸ் சீசன் 4 முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

பட்டினி வரிசையில்… பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட இந்தியா மோசம்!!!

உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்கும் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருக்கிறார்கள் என குளோபல் ஹங்கர்ஸ் இண்டெக்ஸ் தெரிவித்து உள்ளது.

என் கதையை திருடிவிட்டார்: கார்த்திக் சுப்புராஜ் மீது பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் என் கதையை திருடி விட்டார் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது