ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்- ஓபிஎஸ் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி கோவையில் நேற்று இலவசத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு 73 வகையான சீர் வரிசைகளையும் வழங்கி இருந்தனர். இந்நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி போன்றோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், ஜெயலலிதா வழியில் அடி பிறழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதாவிற்கு நன்றி கடனாற்ற வேண்டும்” என்றார்.

தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ள அதிமுக, வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுகவில் விருப்பமனு விநியோகம் செய்யப்பட உள்ளது என்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24-மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More News

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக- முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி விளக்கம்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

தனுஷ் தான் தலைவரா? 'தி க்ரே மேன்' படத்தின் லீக் ஆன தகவல்!

தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில்

பொதுநலனுக்காக போராடினால் தேசத்துரோக வழக்கா? கமல்ஹாசன்

டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சுற்றுச்சூழல் அக்கறையாளர் திஷா ரவி

ம.பி.யில் நடந்த பயங்கரம்… பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

நல்லா இருக்கு ஆஷ்… கோலியின் தமிழை பார்த்து வாயை பிளந்த இன்னொரு வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது