close
Choose your channels

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்- ஓபிஎஸ் புகழாரம்!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி கோவையில் நேற்று இலவசத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு 73 வகையான சீர் வரிசைகளையும் வழங்கி இருந்தனர். இந்நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி போன்றோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், ஜெயலலிதா வழியில் அடி பிறழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதாவிற்கு நன்றி கடனாற்ற வேண்டும்” என்றார்.

தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ள அதிமுக, வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுகவில் விருப்பமனு விநியோகம் செய்யப்பட உள்ளது என்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24-மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.