அடுத்தடுத்து பாலித்தீவு செல்லும் 'எதிர்நீச்சல்' நடிகைகள்.. படப்பிடிப்பு ரத்தா?

  • IndiaGlitz, [Monday,April 08 2024]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் அடுத்தடுத்து சுற்றுலா செல்வதை பார்க்கும் போது ’எதிர்நீச்சல்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக வேல ராமமூர்த்தி நடிக்கும் குணசேகரன் கேரக்டர் காரணமாக கூடுதல் விறுவிறுப்புடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நான்கு முக்கிய வேடங்களில் மதுமிதா, கனிகா, ஹரிப்பிரியா இசை மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் நால்வருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்த மதுமிதா சமீபத்தில் பாலித்தீவு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது ஹரிப்பிரியாவும் பாலித்தீவு சென்று உள்ளார். அங்கு கடலில் குளிப்பது, படகில் செல்வது, விலங்குகளுடன் விளையாடுவது, தண்ணீருக்குள் மூழ்குவது, பாம்பை தோளில் வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களை ஹரிப்பிரியா பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தனது நண்பர்களுடன் பாலித்தீவு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் விமானத்தை தவறவிட்டதாகவும் அவர் கேலியாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வரும் நிலையில் ’எதிர்நீச்சல்’ தொடரின் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? இந்த சீரியலின் நடிகைகள் அடுத்தடுத்து பாலித்தீவு சென்று வருகிறார்களே? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

தியானம் மூலம் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? , யோகா & தியான ரகசியங்கள்

புகழ்பெற்ற தியான பயிட்சியாளர் பரம்ஸ்ரீ சூரத், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தியானம் மற்றும் யோகா மூலம் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி விரிவாக விளக்குகிறார்.

மண்ட மேல கம்பால போட்ட அர்ச்சனா கல்பாத்தி.. கையெடுத்து கும்பிட்ட வெங்கட் பிரபு..!

'கோட்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கம்பை எடுத்து வெங்கட் பிரபு தலையில் போட அதற்கு அவர் கையெடுத்து கும்பிட்டு உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்த விவகாரம்.. நீதிமன்றத்தில் இருவரும் சேர்ந்து மனு தாக்கல்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்த நிலையில் தற்போது சட்டப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இருவரும்

ஐயப்பன் பற்றிய ரகசியங்கள், வரலாறு மற்றும் இருமுடி கட்டுதல் பற்றிய வீரமணி ராஜு பேட்டி!

புகழ்பெற்ற ஆன்மீக பாடகர் வீரமணி ராஜு அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஐயப்பன் பற்றிய ரகசியங்கள், வரலாறு மற்றும் ஏன் இருமுடி கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக விளக்குகிறார்.

அனிருத், அன்பறிவை அடுத்து 'தலைவர் 171' படத்தில் இன்னொரு 'விக்ரம்' பிரபலம்.. யார் அவர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் திரைப்படம் 'தலைவர் 171'. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும்