close
Choose your channels

அடுத்தடுத்து பாலித்தீவு செல்லும் 'எதிர்நீச்சல்' நடிகைகள்.. படப்பிடிப்பு ரத்தா?

Monday, April 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் அடுத்தடுத்து சுற்றுலா செல்வதை பார்க்கும் போது ’எதிர்நீச்சல்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக வேல ராமமூர்த்தி நடிக்கும் குணசேகரன் கேரக்டர் காரணமாக கூடுதல் விறுவிறுப்புடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நான்கு முக்கிய வேடங்களில் மதுமிதா, கனிகா, ஹரிப்பிரியா இசை மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் நால்வருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்த மதுமிதா சமீபத்தில் பாலித்தீவு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது ஹரிப்பிரியாவும் பாலித்தீவு சென்று உள்ளார். அங்கு கடலில் குளிப்பது, படகில் செல்வது, விலங்குகளுடன் விளையாடுவது, தண்ணீருக்குள் மூழ்குவது, பாம்பை தோளில் வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களை ஹரிப்பிரியா பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தனது நண்பர்களுடன் பாலித்தீவு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் விமானத்தை தவறவிட்டதாகவும் அவர் கேலியாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வரும் நிலையில் ’எதிர்நீச்சல்’ தொடரின் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? இந்த சீரியலின் நடிகைகள் அடுத்தடுத்து பாலித்தீவு சென்று வருகிறார்களே? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.