சென்னை கல்லூரியில் தூக்கில் தொங்கிய பேராசிரியை: திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

சென்னை கல்லூரியின் பேராசிரியை ஒருவர் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் தனலட்சுமி. ஆனால் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பே இவர் பணியிலிருந்து நின்று விட்டார் என்றும் இருப்பினும் அவ்வப்போது கல்லூரிக்கு வந்து சென்றதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் இன்று காலை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் யாரும் வருவதற்கு முன்னரே கல்லூரிக்கு வந்த தனலட்சுமி தான் பாடம் எடுத்த வகுப்பறைக்கு சென்று கையை பிளேடால் கீறி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இந்த நிலையில் வழக்கம் போல் மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது தனலட்சுமி பேராசிரியை தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் இதனை தெரிவிக்க கல்லூரி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

கல்லூரியில் வேலை பார்த்த முன்னாள் பேராசிரியை ஒருவர் தான் பாடம் எடுத்த வகுப்பறையிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 52 வயது பூசாரி: சிசுவை வீட்டில் புதைத்த பெற்றோர்!

16 வயது சிறுமி ஒருவரை 52 வயது பூசாரி கர்ப்பமாக்கிய நிலையில் சிறுமிக்கு பிறந்த சிசுவை அவருடைய பெற்றோர் வீட்டின் பின்னால் புதைத்த கொடூரம் தூத்துக்குடி அருகே நடந்துள்ளது 

கமல்ஹாசனிடம் பேசியது என்ன? முக ஸ்டாலின் விளக்கம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் திமுக, இன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமை

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 29 வயது பெண் செய்த திடுக்கிடும் மோசடி!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடி செய்த 29 வயது பெண் குறித்த திடுக்கிடும் மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

தனுஷின் 'சுருளி' படத்தில் இணைந்த பிரபல நடிகை

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சுருளி' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிந்தது. இதனையடுத்து சென்னை திரும்பிய படக்குழுவினர்

இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்: 'தளபதி 64' நடிகரின் பரபரப்பு டுவீட்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருவது தெரிந்ததே.