பெயரை மாற்றுகிறதா ஃபேஸ்புக்… இணையத்தில் உலாவும் தகவல்!

சோஷியல் மீடியா நிறுவனங்களில் மிகவும் முன்னோடியாக விளங்கக்கூடிய ஃபேஸ்புக் தனது பெயரை மாற்றிக்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை வரும் அக்டோபர் 28 ஆம் தேதி அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உலகம் முழுவதும் சமூகவலைத் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது ஃபேஸ்புக். அதற்குப் பின்னர்தான் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற செயலிகள் இந்தியா போன்ற நாடுகளில் பிரபலமடைந்தன. வாட்ஸ்அப் வராத காலக்கட்டத்தில் இந்த ஃபேஸ்புக்தான் பலரின் விவாத மேடைகளாக விளங்கியது. மேலும் பலரது திறமைகளுக்கும் இதுதான் தீனி போட்டது.

அந்த அளவிற்கு இந்திய மக்களிடையே பிரபலமடைந்த ஃபேஸ்புக்கின்  பெயரை அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தற்போது மாற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் ஃபேஸ்புக் நிறுவனத்தின்கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலி நிறுவனங்களும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஃபேஸ்புக் செயலியின் பெயரை மாற்றிவிட்டு இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஒகலஸ், பெயர் மாற்றம் செய்யப்படும் ஃபேஸ்புக் ஆகிய அனைத்தும் ஒரே செயலியின் கீழ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்படி அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்படுவதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் வரும் 28 ஆம் தேதி வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தில் தகவல் வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் சேவை தொடர்பான பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் பெயரை மாற்றுவது பாதகமாக அமையலாம் எனப் பலரும் கூறிவருகின்றனர். ஆனால் பெயர்மாற்றம் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வெளுத்து வாங்கும் கனமழையால் அதிகரிக்கும் உயிரிழப்பு!

உத்திரகாண்ட்டில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல்

26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நாயகியாகும் கமல் பட நடிகை: இயக்குனர் இவர்தான்!

கடந்த 1995ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'சதிலீலாவதி' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த காமெடி நடிகை கோவை சரளா இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக

இயக்குனர் ஷங்கர் மருமகன் மீது வழக்குப்பதிவு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடுரோட்டில் மன்னிப்பு கேட்டாரா தமிழ் நடிகை: அவரே அளித்த விளக்கம்!

ஜிவி பிரகாஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை ஒருவர் நடுரோட்டில் மன்னிப்பு கேட்டதாக இணைய தளங்களில் பரவி வரும் வீடியோவுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்

நல்லவேளை இந்த புரமோவில் அபிஷேக் இல்லை: ஆனால் பாவனி ரெட்டி..

கடந்த சில நாட்களாக விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் மூன்று புரமோக்களிலும் அபிஷேக் தான் வருகிறார் என்பதும் அதேபோல் ஒரு மணி நேர நிகழ்ச்சியிலும் பெரும்பாலும் அவர் ஆக்கிரமித்துக்