சிஎஸ்கே வீரருக்கு காயம்… ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? கலக்கத்தில் ரசிகர்கள்!

சென்னை சிஎஸ்கே அணியின் ஓபனரான ஃபாஃப் டூ பிளஸிக்கு இடுப்பு எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா? என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சிஎஸ்கே அணி வீரருமான டூபிளஸி தற்போது கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதில் லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வரும் டூபிளஸிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெற இருந்த லீக் போட்டியின் அரையிறுதியில் அவர் ஆடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி முதல் அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. ஏற்கனவே 29 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி முதல்போட்டியே மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சிஎஸ்கே அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை 6 ஆவதாக வெற்றி வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக முயற்சித்து வருகிறது. இதில் 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே தற்போது 4 ஆவது முறையாக வெற்றிபெற முனைப்புக் காட்டி வருகிறது.

இத்தனை இக்கட்டான சூழலில் சிஎஸ்கே வீரர் டூபிளஸிக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகி இருப்பதால் அவர் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.

More News

உங்க உரிமை என்னன்னே உங்களுக்கு தெரியலை: சூர்யாவின் அடுத்த படத்தின் டிரைலர்!

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் ஒன்று 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்பது தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று

நீட் தேர்வுக்கு 3வது பலி: சேலம் மாணவி தற்கொலை!

தமிழகத்தில் ஏற்கனவே நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல்

'லிப்ட்' பட பிரச்சனை குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

கவின் நடித்த 'லிப்ட்' என்ற திரைப்படத்தின் பிரச்சனை குறித்து லிப்ரா புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

தலைமுடிக்குப் பதிலாகத் தங்கச்சங்கிலி? ராப் பாடகரைப் பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்!

மெக்சிகோவை சேர்ந்த ராப் பாடகர் ஒருவர் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொள்ள நினைத்து புது முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

முழு ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா… ரசிகர்கள் அதிர்ச்சி!

இலங்கை கிரிக்கெட் அணியில் டெத்-ஓவர் பவுலர் எனப் பெயர் பெற்ற லசித் மலிங்கா அனைத்துவிதப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.