தமிழ் ராக்கர்ஸ் மீது முதல்முறையாக எப்.ஐ.ஆர்: காவல்துறை அதிரடி

  • IndiaGlitz, [Monday,December 11 2017]

தமிழ் திரையுலகினர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் உள்பட ஒருசில இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், மற்ற சங்கங்களும் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முதல்முறையாக தமிழ்ராக்கர்ஸ் உள்பட இரண்டு இணையதளங்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை அயனாவரம் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் ராஜசேகரன் என்பவர் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ராஜசேகரன் கூறியிருப்பதாவது: "நான் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்க அங்கீகரிக்கப்பட்ட நபராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தயாரித்த 'இப்படை வெல்லும்' என்ற தமிழ்ப்படம் 9.11.2017 தேதியில் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தை www.tamilrockers.tv, tamilbox.net இணையதளத்தில் எங்கள் அனுமதியின்றி வெளியிட்டனர். 14.11.2017 அன்று மேற்படி பதிவிறக்கம் செய்தும் அந்தப் படத்தின் டிவிடி-ஐ இத்துடன் தங்களின் விசாரணைக்காக இணைத்துள்ளேன். இதுபோல் இந்த இணையதளம் தமிழ் திரைப்படங்களைத் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிட்டு வருவதுடன் தயாரிப்பாளர்களுக்கும் அரசுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, இந்த இரண்டு இணையதளத்தை தடை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை அதிரடியாக களமிறங்கும் பட்சத்தில் ஆன்லைன் பைரஸி கட்டுப்படுத்தப்படும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More News

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல்காந்தி: அதிகாரபூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என அதிகாரபூர்வமாக அக்கட்சியின் தேர்தல் அதிகாரி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டை பெற்ற 'சென்னை என்கிற மெட்ராஸ்'

'சென்னை என்கிற மெட்ராஸ்' படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்டர்கவர் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்ற புதிய கான்செப்டை கையிலெடுத்துள்ள இயக்குனர் அரவிந்த்குமார்

சங்கர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்க தந்தை வேண்டுகோள்

உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்கும் வகையில் மனசாட்சியின்படி ஒரு நல்ல தீர்ப்பாக இருக்க வேண்டும்

நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் திடீர் விலகல்

நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் திடீரென தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இளையதளபதியிடம் வாழ்த்து பெற்ற இளம் நடிகர்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரும், சத்யராஜின் மகனுமான சிபிராஜ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த திரைப்படம் சத்யா