ஆந்திர முதல்வருக்கு கோவில்… குறைகளை தெரிவிக்க பெட்டி வைத்து அசத்தல்!

  • IndiaGlitz, [Tuesday,August 17 2021]

ஆந்திர அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் மதுசூதனன் ரெட்டி கோவில் கட்டியுள்ளார். மேலும் இந்தக் கோவிலில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில மக்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அவர் கொண்டுவரும் திட்டங்களால் மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்படுகிறார். இந்நிலையில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் “ஜெகண்ணா நவரத்னா கோவில்“ என்ற பெயரில் ரூ.2 கோடி பொருட்செலவில் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.

நவரத்னா திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதைக் களைவதற்கு பணியாளர்கள் அமர்த்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சிலை வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்டு இருக்கிறது. அவருடைய குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் செம்பினால் செய்யப்பட்ட தூண்களில் வடிவமைக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

ஆந்திர மாநில முதல்வருக்கு எம்எல்ஏ மதுசூதன் கோவில் கட்டி இருப்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

மாயாஜாலம் காட்டிய ஷமி-பும்ரா ஜோடி… உற்சாகத்தில் பொங்கிய கோலி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151

லார்ட்ஸ் மைதானத்தில் இமாலய வெற்றிப்பெற்ற இந்திய அணி… துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க “மெக்கா ஆஃப் கிரிக்கெட்“ என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ்

ஹெலிகாப்டர் முழுக்க பணம்… ஆப்கன் அதிபர் தப்பிச்சென்றது குறித்து பரபரப்பு!

ஆப்கானிஸ்தானை விட்டுத் தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டு கிளம்பும்போது  4 கார்கள் முழுக்க பணத்தை எடுத்துவந்து

எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கான்: சூப்பர் டீலக்ஸ் நடிகரின் மகிழ்ச்சியான பதிவு!

பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனது தம்பி பாப்பா பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்று வா அண்ணா: ஆனந்த கண்ணன் மறைவு குறித்து பாடகியின் உருக்கமான பதிவு!

ஆனந்த கண்ணன் நேற்று இரவு திடீரென காலமானது சின்னத்திரை உலகினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.