close
Choose your channels

13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு கிடைத்த சோகம்!

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. இடையில் 2 ஆண்டுகள் சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்டாலும் 11 ஆண்டுகள் விளையாடிய சென்னை அணி இதுவரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது இல்லை

இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்றுடன் 11 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்தவுடன் வெளியான புள்ளி பட்டியலில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் 2 தோல்வி அடைந்த சென்னை அணி 2 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது

கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று வெற்றி பெற்றதன் மூலம் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்றைய தோல்வியால் முதலிடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல் அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போதுள்ள புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ராஜஸ்தான், மூன்றாவது இடத்தில் பெங்களூர், நான்காவது இடத்தில் பஞ்சாப், ஐந்தாவது இடத்தில் மும்பை மற்றும் ஏழாவது இடத்தில் கொல்கத்தா அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

முதல் நான்கு இடத்திற்குள் மட்டுமே சிஎஸ்கே அணியை பார்த்த ரசிகர்கள் தற்போது கடைசி இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இனி வரும் போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் விருப்பமாக உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.