நடிப்பது மட்டுமல்ல, முதல்முறையாக இதையும் செய்கிறார் யோகிபாபு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’மண்டேலா’ திரைப்படம் தேசிய விருது பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலும் காமெடியன் மற்றும் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி தற்போது ஒரு திரைப்படத்தில் அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ரமேஷ் சுப்பிரமணியம் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனம் யோகிபாபு எழுதி உள்ளதாகவும் இந்த படத்தை லெமன்லீஃப் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பூஜை நேற்று முருகன் கோவிலில் நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)