close
Choose your channels

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- தமிழகத்தின் சில  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!

Wednesday, August 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- தமிழகத்தின் சில  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பலான பகுதிகளில் மிதமானது மற்றும் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கோவை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டி இருக்கும்” என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதைத்தவிர வரும் 14 ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் காற்றின் வேகம் சுமார் 45-55 கி.மீ இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.