close
Choose your channels

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சிறையில் அடைப்பு: 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட வந்ததாக திமுகவை சேர்ந்த ஒருவரை பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரை நிர்வாணப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போலீசார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் நேற்று சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை மார்ச் 7ஆம் தேதி வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.