close
Choose your channels

கமல் இப்படி சொல்லி கடந்து போயிருக்கலாம்: பிரதீப் விவகாரம் குறித்து முன்னாள் டைட்டில் வின்னர்..!

Tuesday, November 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியது நியாயமான செயல் அல்ல என்றும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கமல்ஹாசன் கொஞ்சம் யோசிக்காமல் இந்த விஷயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்றும், பிரதீப்புக்கு அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கி ஒரு வாய்ப்பை அளித்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘பிரதீப் இடம் கமல் அவர்கள் இனிமேல் இதுபோன்று செய்ய வேண்டாம் என்று நல்ல முறையில் சொல்லி அவர் கடந்து போய் இருக்கலாம். ஆனால் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றியதை நியாயம் என்று பார்க்கவில்லை

குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு என்று கூறிய காரணத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படி இருந்தாலும் பிரதீப்பை வெளியேற்றியதை நான் ஆதரிக்கவில்லை. அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்

’நீ ரொம்ப கடினமான வார்த்தையை பயன்படுத்தி விட்டாய், இது மிகப்பெரிய தவறு, இனிமேல் இந்த வார்த்தையை பயன்படுத்தினால் உன்னை வெளியேற்றி விடுவேன்’ என்று கமல் அவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்து அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கலாம். அந்த வாய்ப்பை அவருக்கு கொடுக்காமல் வெளியேற்றியது நியாயம் இல்லை’ என்று அசீம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.