ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,August 03 2022]

பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது என்றும் ஆண்டு சிலையை உடைக்க வேண்டும் என்றும் அந்த நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றும் பேசியுள்ளார்.

அவரது இந்த பேச்சுக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயக்குமாரின் இந்த கேள்வியை அடுத்து காவல்துறை கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

More News

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சிவாஜி, கமல், ரஜினி பட நடிகை!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற 'மண்டேலா' என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'பீஸ்ட்' நடிகர்!

ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள 30வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து வருகின்றன.

கமல்ஹாசனுடன் ஜோடி சேர்கிறாரா பாலிவுட்-ஹாலிவுட் நடிகை?

உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

முதல் படம் வெளியாகும் முன்னரே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த நடிகை!

பிரபல இயக்குனர் ஒருவரின் மகள் நடிகையாக அறிமுகமான நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழங்கால் அளவில் பாவாடை அணிந்து படவிழாவுக்கு வந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட விழாவுக்கு பாவாடையுடன் வந்ததையடுத்து திரைப்பட விழா குழுவினர் உள்பட ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்தனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ