close
Choose your channels

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

Wednesday, August 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது என்றும் ஆண்டு சிலையை உடைக்க வேண்டும் என்றும் அந்த நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றும் பேசியுள்ளார்.

அவரது இந்த பேச்சுக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயக்குமாரின் இந்த கேள்வியை அடுத்து காவல்துறை கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.