சினிமாவில் ஒற்றை தலைமை விஜய் தான்: ஜெயகுமாரின் மகன் இன்னும் என்னென்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,July 18 2022]

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சினிமாவில் விஜய்யை அவரது ரசிகர்கள் ஒற்றை தலைமையாக பார்க்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படம் குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த ஜெயவர்தன், ‘நான் இளைஞனாக இருந்தாலும் சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை என்றும், ரஜினி அஜித் விஜய் உள்பட யாருடைய ரசிகனும் நான் கிடையாது என்றும் ஆனால் விஜய்யின் ‘வாரிசு’ பட பர்ஸ்ட் லுக் குறித்து கட்சிக்காரர்கள் சொன்னதால் அதுகுறித்து சில விஷயங்களை கேள்விப்பட்டேன் என்றும் கூறினார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் மூலம் நல்லெண்ணத்தை விதைக்கும் கதைகளை வாரி வழங்குவது போல் விஜய்யும் அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்றும் அவர் நடித்துவரும் ‘வாரிசு’ படம் நல்லெண்ணத்தை கூறும் படமாக இருக்கும் என்றால் எனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முந்தைய விஜய் படங்கள் போல் இல்லாமல் ‘வாரிசு’ படம் நல்ல வசூலை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கலைத்துறையில் விஜய்யை ஒற்றை தலைமையாக அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்றும் அதனால் தான் இப்படி ஒரு தலைப்பை அவரது படத்துக்கு வைத்திருக்கிறார்கள் என்று கூறிய ஜெயவர்தன் இந்த தலைப்பு அதிமுகவை சீண்டுவதாக நான் பார்க்கவில்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

மேலும் விஜய் என்னுடைய தொகுதியில் தான் இருக்கிறார் என்றாலும் அவரை நான் சந்தித்ததில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அவருடைய அம்மாவும் என்னுடைய அம்மாவும் நெருக்கமான தோழிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நான் அரசியல் வாரிசு கிடையாது என்றும் என்னுடைய அம்மாதான் என்னை வேட்பாளராக தேர்வு செய்தார் என்றும் என்னை வாரிசு அரசியல்வாதியாக யாரும் பார்க்க வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

More News

'புஷ்பா 2' வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியின் சம்பளம் இத்தனை கோடியா?

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க 10 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் அதை விட இருமடங்கு 'புஷ்பா 2' படத்தில் வில்லனாக நடிக்க வாங்கியுள்ளதாக கூறப்படுவதால் பெரும்

சினிமாவை நிறுத்துவது தான் உளவுத்துறையின் வேலையா? எச்.ராஜா கண்டனம்

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை திரையிடக் கூடாது என உளவுத்துறை அதிகாரி ஒருவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படும்

ஜெய்-அதுல்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பல பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ஜெய், அதுல்யா ரவி நடித்த திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் ஏ.எல்.விஜய் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சி: திரையுலகினர் இரங்கல்

இயக்குனர் ஏ.எல். விஜய்யின் தாயாரும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஏ.எல்.அழகப்பன் அவர்களின் மனைவியுமான வள்ளியம்மை என்பவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

'குக் வித் கோமாளி' சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா? கசிந்த புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றது போலவே மூன்றாவது சீசனும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.