close
Choose your channels

ஜெய்-அதுல்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, July 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பல பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ஜெய், அதுல்யா ரவி நடித்த திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய், அதுல்ய ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, ஜி மாரி முத்து உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’எண்ணித்துணிக’. வெற்றிச்செல்வன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணியை விரைவில் தொடக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

’எண்ணித் துணிக’ படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜெய்க்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.