நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடியா? ஆச்சர்யத்தில் ஒரு லட்சத்தை இழந்த இளைஞர்!

  • IndiaGlitz, [Friday,October 15 2021]

 

 

 

கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தேனியைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று காண்போரை நிர்வாணமாகக் காட்டும் மாயக்கண்ணாடி எனக்கூறி முதியோர் அணியும் கண்ணாடியை ரூ.1 லட்சத்திற்கு விற்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரசமுத்து, திவாகர். இவர்கள் கும்பகோணம் பகுதியில் வசித்துவரும் யுவராஜ் என்பவரிடம் காண்போரை நிர்வாணமாகக் காட்டும் மாயக்கண்ணாடி தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் உற்சாகமடைந்த யுவராஜ் ஆர்வக்கோளாறில் தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு மாயக்கண்ணாடியை வாங்குவதற்காக காரில் தேனி விரைந்துள்ளார்.

இதையடுத்து பெரியகுளம் அருகேயுள்ள நகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டிற்கு வரச்சொன்ன மோசடிக் கும்பல் யுவராஜ்ஜிடம் இருந்து ரூ.1 லட்சத்தை வாங்கிக்கொண்டு முதியோர் அணியும் கண்ணாடியைக் கொடுத்துவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்ட யுவராஜ் அரசமுத்துவை துரத்திப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் ரூ1 லட்சத்தோடு தப்பிவிட்ட திவாகரை போலீசார் தேடிவருகின்றனர்.

More News

த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த ஆச்சரியமான தகவல்!

தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போதும் கூட இளம் நடிகைகளுக்கு இணையாக சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: நாயகி யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி தற்போது 'கோடியில் ஒருவன்' 'தமிழரசன்' 'அக்னிசிறகுகள்' 'காக்கி' மற்றும் 'பிச்சைக்காரன் 2' ஆகிய ஐந்து படங்களில் நடித்து வருகிறார்

சமந்தாவின் இன்னொரு படத்தின் அறிவிப்பு: இரட்டை இயக்குனர்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா, பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

விவேக் சாருக்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்: ஆர்யா

விவேக் அவர்களுக்கு கொடுத்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன் என நடிகர் ஆர்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

பிரியங்காவை செமையாக கலாய்த்த தாமரைச்செல்வி: இவரா அப்பாவி?

இதுவரை நடைபெற்ற அனைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அப்பாவியாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தே ஒன்றும் தெரியாதவராகவும் இருந்தவர் தாமரைச்செல்வி என்றே கூறலாம்