close
Choose your channels

பிரியங்காவை செமையாக கலாய்த்த தாமரைச்செல்வி: இவரா அப்பாவி?

Friday, October 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை நடைபெற்ற அனைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அப்பாவியாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தே ஒன்றும் தெரியாதவராகவும் இருந்தவர் தாமரைச்செல்வி என்றே கூறலாம். அவருடைய அப்பாவித்தனமான வெள்ளேந்தி பேச்சு அனைவரையும் கவர்ந்தது என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் பிரியங்காவும் தாமரைச்செல்வியும் பேசும் காட்சிகளில் வீடியோ இன்றைய மூன்றாவது புரமோவில் வெளிவந்துள்ளது. அதில் ’இந்த வீட்டில் யார் நன்றாக வேலை செய்கிறார்கள், யார் சரியாக வேலை செய்கிறார்கள் என்று கேட்டால் நீ யாரைச் சொல்ல வேண்டுமென்று தாமரையை பிரியங்கா கேட்க, எல்லோருமே நன்றாக தான் வேலை செய்கிறார்கள் என்று தாமரைச்செல்வி கூறுகிறார்.

அப்போது பிரியங்கா ’அதெல்லாம் கிடையாது, நீ எனக்கு தோழி தானே, நீ எனக்கு தோழியாக இருப்பதால் எனக்கு ஏதாவது லாபம் இருக்கவேண்டும் தானே, அதனால் நீ யாருடைய பெயரை சொல்வாய்? என கேட்க அதற்கு ‘நாடியா’ பெயரை சொல்கிறார்.

இதனால் சற்று பிரியங்கா திணறும்போது எகத்தாளமாக ஒரு நடன அசைவை கொடுத்துவிட்டு தாமரைச்செல்வி செல்லும் காட்சி இந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது இவரா அப்பாவித்தனமாக வெள்ளந்தி தனமாக இருந்தார்? பிக்பாஸ் வீட்டிற்கு வந்து கேலியும் நக்கலும் கற்று விட்டாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது. போகப்போக இனி தாமரைச் செல்வியின் உண்மையான சொரூபம் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.