close
Choose your channels

கொரோனா எச்சரிக்கை நடவடிக்கை: இன்று முதல் தமிழக கேரள எல்லை மூடல்

Friday, March 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று மாலை முதல் தமிழக-கேரள எல்லை மூடப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்பது சோதனைச் சாவடிகளும் இன்று மாலை 5 மணி முதல் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது என்று கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் கேரளாவில் மிக அதிகமாக இருப்பதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.