பிரபல ரவுடி விகாஷ் துபே என்கவுண்டரில் சுட்டு கொலையா? பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல் வெளிவந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மத்திய பிரதேச மாநிலத்த்தில் கைதான விகாஸ்துபேவை உத்தரபிரதேச மாநிலத்திற்கு அழைத்து வந்தபோது மழையால் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த பரபரப்பை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிச்செல்ல முயன்றதாகவும் அப்போது போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த விகாஸ் துபே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை எனினும் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே நேற்று விகாஸ் துபேயின் 2 கூட்டாளிகள் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் ஒருவன் மட்டும் கைது செய்யப்பட்டு கான்பூர் அழைத்து வரும் வழியில் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றதால் அவனும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

பிரபல வில்லன் நடிகரின் சிகிச்சைக்கு உதவிய கமல்!

பிரபல வில்லன் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மீண்டும் 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: வழக்கம்போல் மீண்டு வரும் சென்னை!

தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்

பிரபல பாடகர் கொல்லப் பட்டதற்காக வெடித்த போராட்டம்!!! வன்முறையாக மாறியதால் நடந்த கொடூரம்!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தோப்பியாவில் ஒரு பிரபல பாடகர் மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

அவருடைய பந்திற்கு சச்சினே பயப்படுவார்… சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஃப்ரிடி!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகியதில் இருந்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுல இந்த 8 மாநிலங்களும் ரொம்ப மோசம்… அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மத்திய அரசு!!!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 90 விழுக்காடு பாதிப்பு வெறுமனே 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.