close
Choose your channels

காஷ்மீர் பிரச்சனையில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் வீரர்கள்

Tuesday, August 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்ட விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர் உள்பட பலர் இது குறித்து தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களும் இது குறித்த கருத்துகளை தெரிவித்துள்ளனர்

காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கூறியதாவது: காஷ்மீர் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் ஐநா சபை உறுதியளித்தவாறு வழங்க வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்கும் சொந்தமானது. ஐநா சபை உருவாக்கப்பட்டதே இதற்காகத்தான். அது ஏன் தற்போது தோன்றுகிறது என்று தெரியவில்லை. காஷ்மீர் மாநிலத்தில் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்

இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கூறியபோது, 'இந்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் குற்றச்செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கைகள்> இதற்கு குரல் கொடுக்கும் அஃப்ரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் குற்றங்கள் குறித்து பேச மறந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு 'கவலை வேண்டாம் மகனே இவை அனைத்தும் தீர்க்கப்படும்' என்று பதிவு செய்துள்ளார்

சமீபத்தில் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்து டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.