close
Choose your channels

இன்று எனக்கு மிகவும் ஸ்பெஷல் நாள்.. கெளதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சியான பதிவு..!

Tuesday, November 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நடந்த நிலையில் இன்றுடன் திருமணம் முடிந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து இன்று தனக்கு ஸ்பெஷலான நாள் என்று நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நமக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனதை அடுத்து வாழ்த்துகிறேன். இந்த ஒரு வருடம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கையாக பயணமாக இருந்தது. கடந்த வருடத்தின் ஒவ்வொரு நாளையும் நான் நினைத்துப் பார்க்க விரும்புகிறேன். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒன்றாக எடுத்து வைத்து ஒன்றாக வளர்ந்தோம்.

இந்த ஒரு ஆண்டு எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. நீங்கள் எனக்காக ஒரு வீட்டை உருவாக்கி உள்ளீர்கள், நான் பாதுகாப்பாக உணரக்கூடிய ஒரு இடத்திற்கு அழைத்து சென்ற நீங்கள், நான் நினைத்ததை விட எனக்கு பலத்தை அளித்தீர்கள். என் மீதும் எனது திறமையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து எனக்கு ஊக்கமளித்து உள்ளீர்கள்.

இருண்ட இடங்களுக்கு நான் செல்ல முயன்ற போது அதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டி என்னை வெளியே எடுத்து காப்பாற்றி உள்ளீர்கள். நீ என் ஒளிரும் நட்சத்திரம், என் உலகம், நீ இல்லாமல் நான் எப்படி வாழ்ந்தேன் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன், இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்’ என்று கெளதம் கார்த்திக் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.