எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.1 கோடி, முதல்வரான பின் ரூ.25 லட்சமா? ஸ்டாலினுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி தரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூதாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்றிய ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் 25 லட்சம் மட்டுமே அறிவித்துள்ள

கடந்த ஏப்ரல் மாதம் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியபோது அந்தக் கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களின் கூறியுள்ளார்

இந்த நிலையில் தற்போது அவரே முதல்வர் ஆகியுள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்குவதாக அறிவித்து இருந்தார். இதுகுறித்து அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் ஏற்கனவே முதல்வரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இந்த நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முன் பணியாளர்கள் உயிர் இழந்தால் 1 கோடியை நிவாரணம் ஸ்டாலின் கோரினார். மோடி ஜீ மற்றும் EPS 50 லட்சம் கொடுத்தார்கள்.. அதை ஸ்டாலின் இப்பொழுது 25 லட்சமாக குறைத்து விட்டார். அன்று கேட்டது ஒன்று இன்று செய்வது ஒன்று’ என பதிவு செய்துள்ளார்.

வழக்கம்போல் காயத்ரியின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் எதிர்மறை கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். எடப்பாடி ஆட்சியில் ரூ.50 லட்சம் யாருக்கும் கொடுக்கவில்லை என்றும், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறியது என்ன ஆச்சு என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

கொரோனாவால் நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்… நிலவரம் என்ன?

கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலை காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகபட்சமாக தினம்தோறும் 7 ஆயிரம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டன

ஊரடங்கிலும் ரெட் அலார்ட்...  தருமபுரியின் அவலத்தை கூற எம்.பி  போட்ட டுவிட்...!

தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள்  நிலைமை மோசமாகி  வருவதால் அங்கு, ரெட் அலர்ட்  போடவேண்டும் என திமுக எம்பி டுவிட் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, குழந்தைகளைப் பார்க்க வேண்டும்? அசால்ட்டா பேருந்தையே திருடிய இளைஞர்!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகப் தற்போது பல்வேறு மாநிலங்களில் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து மார்ச் மாதம் ரிலீசாக

காதலருடன் நெருக்கம்: ஸ்ருதிஹாசனின் லாக்டவுன் ஸ்பெஷல் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'ஏழாம் அறிவு' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.