ஐஸ்வர்யா யாருக்கு மட்டும் இனிமையானவர்? காயத்ரி ரகுராம்

  • IndiaGlitz, [Monday,October 01 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ரன்னராக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவை பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் புகழ்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா, உங்களை நேரில் சந்தித்தவர்கள் மட்டுமே நீங்கள் இனிமையானவர் என்பதை புரிந்து கொள்வார்கள். சிறப்பாக விளையாடிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

அதேபோல் பிக்பாஸ் வின்னர் ரித்விகா குறித்து அவர் கூறியபோது, 'நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பது எனக்கு முதல் நாளிலேயே தெரியும். உங்கள் அமைதி எனக்கு அவ்வாறு உணர்த்தியது. மக்கள் உங்களை சரியாக புரிந்து கொண்டு தேர்வு செய்துள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.

அதேபோல் மூன்றாம் இடம் பிடித்த விஜயலட்சுமி குறித்து காயத்ரி கூறியபோது, 'வைல்ட் கார்டு போட்டியாளராக இடையில் வந்தபோது முழு எனர்ஜியுடன் போராடினீர்கள் வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

More News

ஐஸ்வர்யாவின் காதலர் கோபியின் அதிர்ச்சி கிரிமினல் பின்னணி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையளார்களின் ஒட்டு மொத்த அதிருப்தியையும் சம்பாதித்த ஒரே ஒரு போட்டியாளர் உண்டென்றால் அது ஐஸ்வர்யா

செக்க சிவந்த வானம்' 4 நாள் வசூல் சாதனை

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டு: ரித்விகாவை வாழ்த்திய பிரபலம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவரான ரித்விகா, ஆரம்பத்தில் அமைதியாக, கலகலப்பின்றி இருந்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதே தெரியவில்லை என்று கூட ஒருசிலர் குற்றஞ்சாட்டினர்.

கமல்ஹாசனுக்கு குறும்படம் போட்ட ஓவியா

இந்த இரண்டு சீசனிலும் கமல்ஹாசன் பலருக்கு குறும்படம் போட்டு வந்த நிலையில், அவருக்கு தான் ஒரு குறும்படம் வைத்திருப்பதாக கூறி அந்த படத்தையும் ஒளிபரப்பும்படி கேட்டுக்கொண்டார்.

இன்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய்யின் 'புரட்சி' ஆரம்பம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில்