ஆண்கள் எதற்கு? செக்ஸ் பொம்மையே போதுமே... பரபரப்பைக் கிளப்பும் பிரபல மாடல் அழகி!

  • IndiaGlitz, [Saturday,April 30 2022]

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர், செக்ஸ் பொம்மைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன், திருமணம் மற்றும் ஆண்களின் மீது தனக்கு நம்பிக்கையே போய்விட்டது என்று பொதுவெளியில் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி லிசா டெல் பீரோ 17 வயது முதலே பிரபல மாடலாக அறியப்படுகிறார். தற்போது 25 வயதாகும் இவர் தொடர்ந்து ஃபிட்னஸ் விசயங்களில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். மேலும் கடந்த 6 ஆண்டுகளாக ஃபிட்னஸ் குறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் லிசாவிற்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது ரசிகர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட லிசா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருடன் டேட்டிங் செய்ததாகவும் இறுதியில் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தவுடன் மிகவும் உடைந்துபோனதாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து லிசாவிடம் தனியாக வாழ்வது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியபோது, உங்களது மகிழ்ச்சிக்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர், நீங்கள் கர்ப்பமாகிவிட்டால் என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த லிசா, செக்ஸ் டாய்ஸ் மூலம் கர்ப்பம் அடைந்தால் உண்மையில் நான் சந்தோஷப்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களுடன் சுவாரசிய உடையாடலில் ஈடுபட்ட மாடல் அழகி லிசா இறுதியில் நான் செக்ஸ் பொம்மைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறேன். திருமணம் மற்றும் ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை என்று விரக்தியில் கூறிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக ஆண் பிரபலங்கள் சிலர் திருமணங்களை வெறுத்து செக்ஸ் பொம்மைகளை திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரபல மாடல் அழகி செய்த இந்தக் காரியம் பொதுமக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

More News

இரட்டை இலை வழக்கு: பிரபல நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

 இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா என்பவர் பரிசாக கொடுத்ததாக நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன .

இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம்: தமிழ் இயக்குனருக்கு குவியும் கண்டனம்

இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்களை இயக்க மட்டும் துடிப்போம் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள நிலையில் அவருக்கு ஏராளமான

2024ல் ரிலீஸ் ஆகும் சூர்யா படத்தின் பணியை இப்போதே தொடங்கிய இயக்குனர்!

 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் சூர்யா படத்தின் பணிகளை இப்போதே அந்த படத்தின் இயக்குனர் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கோடிகளை கொட்டி கொடுக்க முன்வந்தும் நடிக்க முடியாது என மறுத்த யாஷ்: குவியும் பாராட்டுக்கள்!

 யாஷ் நடித்த 'கேஜிஎப் 2'  திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க முன்வந்தும் நடிக்க முடியாது

நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் புன்னகை அரசியான லைலா தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ரசிகர்கள்