close
Choose your channels

கோடிகளை கொட்டி கொடுக்க முன்வந்தும் நடிக்க முடியாது என மறுத்த யாஷ்: குவியும் பாராட்டுக்கள்!

Saturday, April 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க முன்வந்தும் நடிக்க முடியாது என மறுத்துள்ளதாக வெளி வந்திருக்கும் தகவலை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .

பிரபல நடிகர்களை வளைத்து போட்டு பான்மசாலா தயாரிப்பு நிறுவனங்கள் விளம்பர படம் எடுத்து வரும் நிலையில் சமீபத்தில் முன்னணி பான்மசாலா நிறுவனமொன்று தங்கள் விளம்பர படத்தில் நடிக்க கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் மக்களுக்கு தீங்கை தரும் பொருட்களின் விளம்பரத்தில் நடிக்க விரும்பவில்லை என யாஷ் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து உண்மையான ஹீரோ யாஷ் தான் என்றும் மக்கள் மற்றும் ரசிகர்களிடம் உண்மையான அக்கறையுடன் அவர் உள்ளார் என்றும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சமிபத்தில் அக்ஷய்குமார் இதுபோன்ற ஒரு விளம்பரப் படத்தில் நடித்து அதன் பின்னர் ரசிகர்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்தார். ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதே போன்ற ஒரு விளம்பரத்தில் நடிக்க முடியாது எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.