காதலர் ஆணுறையில் ஓட்டைப் போட்ட இளம்பெண்… சிறையில் தள்ளப்பட்ட சோகம்!

  • IndiaGlitz, [Sunday,May 08 2022]

ஜெர்மனி நாட்டில் உடலுறவுக் கொள்ளும்போது தனது ஆண் நண்பருக்குத் தெரியாமல் அவருடைய ஆணுறையில் ஓட்டைப் போட்டு மாட்டிக்கொண்ட இளம்பெண்ணுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் பைல்ஃபெல்ட் எனும் பகுதியில் வசித்துவரும் 39 வயது பெண் ஒருவர் கடந்த 2021 முதல் 42 வயது ஆண் நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இதையடுத்து இந்த ஜோடி ஒன்றாக வசிக்கவும் செய்திருக்கின்றனர். இந்நிலையில் தனது காதலர் மீது அதிகப்படியான அன்பு கொண்ட அந்தப் பெண், அவர் மூலமாகக் குழந்தைப் பெற்றுக்கொள்ள நினைத்திருக்கிறார். ஆனால் அவருடைய காதலர் அதில் பெரிய அளவிற்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறார்.

இதையடுத்து ஆண் நண்பருக்குத் தெரியாமலேயே கர்ப்பம் அடைந்துவிடலாம் என முடிவுசெய்த அந்தப் பெண் தாங்கள் உடலுறவின்போது பயன்படுத்தும் ஆணுறையில் ஓட்டையைப் போட்டிருக்கிறார். தொடர்ந்து தான் கர்ப்பமாக இருக்கிறேன் என தனது நண்பரிடம் கூறிய அந்தப் பெண், ஆணுறையில் திருட்டுத்தனமாக ஓட்டைப் போட்டதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் கடும்கோபம் கொண்ட அந்த ஆண் நண்பர் தனது காதலி மீது கிரிமினல் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

உண்மையில் ஆணுறையை துளையிட்டதால் அந்தப் பெண் கர்ப்பம் அடையவில்லை. ஆனாலும் இந்த வழக்கு முதலில் கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஸ்ட்ரிட் சலேவ்ஸ்கி என்பவர் ஆணுறையை தனது துணைக்குத் தெரியாமல் அவிழ்ப்பதும் தவறு, அவரது சம்மதம் இல்லாமல் பயன்படுத்துவதும் தவறு எனக்கூறி இந்த வழக்கை பாலியல் வன்கொடுமை என்ற பிரிவின்கீழ் கொண்டு வந்துள்ளார்.

 

இதையடுத்து தனது காதலரின் ஆணுறையில் ஓட்டைப்போட்ட இளம்பெண்ணுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஆணுறையைப் பயன்படுத்தவில்லை என்று பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் முதல் முறையாகப் பெண் ஒருவர் ஆணுறையில் ஓட்டைப்போட்டார் என்ற குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற இந்தச் சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

More News

பிஞ்சு குழந்தைகளைத் தாக்கும் தக்காளி வைரஸ் நோய்… தமிழகத்திலும் பரவலா?

கேரளாவில் 85 குழந்தைகள் புதியவகை வைரஸ் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு

'அஜித் 61' படத்தில் நடிப்பது உண்மையா? மஞ்சுவாரியர் அளித்த பதில்!

பிரபல மலையாள நடிகையும் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் நடித்தவருமான மஞ்சுவாரியர் 'அஜித் 61' படத்தில் நடிப்பது உண்மையா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

'டான்' சென்சார் தகவல்: இந்த படத்திற்கு சென்சார் கொடுத்த சிறப்பு என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் 'டான்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

'டான்' சென்சார் தகவல்: இந்த படத்திற்கு சென்சார் கொடுத்த சிறப்பு என்ன தெரியுமா?

சிவகார்த்த

'அஜித் 61' படத்தில் இணைந்த 'சார்பாட்டா பரம்பரை' நடிகர்

அஜித்தின் நடித்து வரும் 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 'சார்பாட்டா பரம்பரை' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல்