கோவா சுற்றுலா சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்: போலீசார் அதிரடி நடவடிக்கை!


Send us your feedback to audioarticles@vaarta.com


10 முதல் 14 வயதுடைய சிறுமிகள் கோவாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அதில் ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
தற்போது கோவாவுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் 10 முதல் 14 வயதுடைய சிறுமிகள் சேர்ந்து கோவாவுக்கு விடுமுறை சுற்றுலா சென்றனர்.
அனைவரும் ஒரு டெம்போ வாகனத்தில் கோவாவில் கடற்கரை ஏரியா உள்பட பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வாகனத்தின் டிரைவர் அதில் உள்ள ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் டிரைவரின் பெயர் சந்திரசேகர் என்றும் அவர் சுற்றுலா வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவாவுக்கு இன்ப சுற்றுலா சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments