close
Choose your channels

பாண்டிச்சேரியில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு.. யாருடைய காட்சிகள் படமாக்கப்படுகிறது தெரியுமா?

Sunday, May 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் யாருடைய காட்சியின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் புகைப்படத்துடன் கசிந்துள்ளது.

‘கோட்’ படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை விஜய்யின் காட்சிகள் முழுமையாக முடிந்து விட்டது என்றாலும் மற்ற நடிகர் நடிகையின் காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக பாண்டிச்சேரியில் இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்க இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றும் இந்த படப்பிடிப்பில் ஜெயராம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது. படப்பிடிப்பின் போது இடையே எடுத்த புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இன்னும் ஓரிரு நாளில் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறும் என்றும் பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.