திருச்சியில் ஒரு 'கனா' கெளசல்யா: குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Tuesday,April 23 2019]

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 800 போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுதான் என்பது குறிப்ப்பிடத்தக்கது. திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த கோமதி, இன்று ஒரே நாளில் உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார்.

ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்த கோமதி மாரிமுத்து 20 வயது முதல் தடகள பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 7வது இடம்பிடித்த கோமதி அதன்பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 வினாடிகளில் கடந்து சாதனை செய்துள்ளார். இந்த வெற்றியை என்னால் நம்பவே முடியவில்லை என்றும், கடைசி 150 மீ தூரம் ஓடுவது கடினமாக இருந்ததாகவும் கோமதி மாரிமுத்து கூறினார்.

கோமதி தாய்நாட்டிற்காக தங்கம் வென்ற செய்தி உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் அவரது கிராமத்தில் உள்ள அவரது தாயார் ராசாத்திக்கு தெரியாமல் இருந்துள்ளது. அவரது கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி டிவியில் செய்தியை பார்த்து கூறியபின்னரே தனது மகளின் சாதனை அவருக்கு தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான 'கனா' திரைப்படத்தில் எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த கெளசல்யா கேரக்டர் போல் ஒரு நிஜ கெளசல்யா உள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டு வருகின்றனர்.

More News

நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு போடவில்லை: தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றபோது வாக்காளர் பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பெயர் இல்லாததால்

சிவகார்த்திகேயனை ஓட்டு போட அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை!

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதாது. ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே அவர் வாக்களிக்க முடியும். 

மதுபோதையில் தற்கொலை நாடகமாடிய வாலிபர் பரிதாப பலி! 

மதுபோதையில் தற்கொலை செய்ய போவதாக நாடகமாடிய இளைஞர் ஒருவரின் விளையாட்டு விபரீதமாகி பரிதாபமாக பலியான சோக  சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது

முடிவுக்கு வந்தது ஆர்யாவின் அடுத்த படம்!

ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு 'கஜினிகாந்த்' வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு அவர் சூர்யாவின் 'காப்பான்' உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இவ்வாண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.