ஆணவ படுகொலையான நந்தீஷ் குடும்பத்திற்கு குவியும் உதவிகள்

  • IndiaGlitz, [Wednesday,November 21 2018]

ஒசூர் அருகேயுள்ள சூடகொண்டப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த நந்தீஷ் - சுவாதி ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு சுவாதி வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் நந்தீஷ்-சுவாதி ஜோடி திடீரென வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து ஓசூர் அருகே தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்த விசாரணையில் சுவாதியின் பெற்றோர்தான் இந்த கொலைக்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து சுவாதியின் தந்தை உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நந்தீஷ் மறைவால் அவரது குடும்பத்தினர் திக்கற்ற நிலையில் இருந்த நிலையில் அவரது குடும்பத்தினர்களுக்கு அரசு உதவி தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து நந்தீஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 3 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும், நந்தீஷ் பெற்றோருக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம், வீடு அல்லது நிலம் வழங்கப்படும் என்றும், நந்தீஷ் பெற்றோரை சந்தித்தபின் எஸ்.சி/எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.

 

More News

8 நிமிட சிங்கிள் ஷாட்: விஜய்சேதுபதியை பாராட்டிய பிரபல நடிகர்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளதால்

ஷங்கர்-வடிவேலு சமரசம்: மீண்டும் தொடங்கும் 'இம்சை அரசன் 2'

வடிவேலு நடிப்பில் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வந்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது

ஏ.ஆர்.ரஹ்மானின் கஜா புயல் நிவாரண நிதி

கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற திரையுலகினர் ஏராளமான நிதியுதவிகளை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

மின் ஊழியர்களுக்கு தினமும் 3 நாள் சம்பளம்: தமிழக அரசு அதிரடி

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் மிகப்பெரியதாக கருதப்படுவது லட்சக்கணக்கான மின் கம்பங்கள், டிரான்ஸ்பர்கள் சாய்ந்ததுதான். இந்த பணிகளை சீரமைப்பது என்பது மின்சார துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி அறிவித்த கேப்டன் விஜயகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.