40 ஆண்டுகளுக்கு பின் சகுந்தலாதேவிக்கு கிடைத்த கின்னஸ் சான்றிதழ்: அஜித் பட நடிகை எடுத்த முயற்சி

  • IndiaGlitz, [Friday,July 31 2020]

இந்தியாவைச் சேர்ந்த கணித மேதை சகுந்தலாதேவி அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன் கின்னஸ் சாதனை அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான சான்றிதழ் தற்போது தான் கிடைத்துள்ளது என்பதும் அதற்கு அஜித் பட நடிகை ஒரு காரணம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

உலகத்திலேயே மிக வேகமாக கணிதம் செய்யும் திறமை கொண்டவர் சகுந்தலா தேவி. இவர் கடந்த 1980ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கொடுத்த 13 இலக்க எண்கள் இரண்டை 28 விநாடிகளில் பெருக்கி விடை அளித்து அனைவரையும் அசத்தினார். இது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த 40 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட இந்த சாதனைக்கான சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கவில்லை. இந்த நிலையில் கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை வித்யாபாலன் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றபோது கின்னஸ் நிறுவனத்திடம் இது குறித்து பேசினார். அவருடைய முயற்சியின் அடிப்படையில் தற்போது சகுந்தலா தேவியின் மகளுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

40 ஆண்டுகள் கழித்து தனது தாயார் சகுந்தலாதேவியின் சாதனைக்கான கின்னஸ் சான்றிதழை பெற்றுக் கொள்வதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் இதற்கான முயற்சி எடுத்த நடிகை வித்யா பாலனுக்கு தனது நன்றி என்றும் சகுந்தலா தேவியின் மகள் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘சகுந்தலா தேவி’ என்ற திரைப்படம் இன்று ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி உள்ளது என்பதும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை வித்யாபாலன், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

உடலை வில்லாக வளைத்து யோகா செய்யும் குஷ்பு: வைரலாகும் புகைப்படங்கள்!

கடந்த 90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் ஒரு நடிகைக்காக ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அது குஷ்புவுக்குதான்

பெரிய ஃபியூட்சர் இருக்கு உங்களுக்கு: ரஜினியிடம் பாராட்டு பெற்ற ஹிட் பட இயக்குனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'

உலக நாடுகள் அனைத்தும் கால்பதிக்க துடிக்கும் செவ்வாய் கிரகம்!!! மர்மம் நிறைந்த அதன் சிறப்புகள்!!

சூரிய மண்டல கிரகங்களில் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் ஒரு கிரகமாக செவ்வாய் இருந்து வருகிறது

சூர்யா, கார்த்தியை அடுத்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு குரல் கொடுத்த தமிழ் நடிகை!

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த சுற்றுச்சூழல் குறித்த புதிய விதிமுறைகளுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது என்பது தெரிந்ததே.

வேண்டுகோள் விடுத்த 2 நாளில் 'மாஸ்டர்' நாயகிக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்?

சமீபத்தில் தனுஷின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் அனைத்து நடிகர் நடிகைகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.