close
Choose your channels

ரிலீசாகி இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு வந்த ஜிவி பிரகாஷ் படம்.. ரூல்ஸ் எல்லாம் அவ்வளவுதானா?

Saturday, April 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இன்று திடீரென ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளதை அடுத்து ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை மதிக்காமல் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கொதித்து எழுந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ், மமிதா பாஜு நடிப்பில் நிகேஷ் இயக்கத்தில் உருவான ’ரிபெல்’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் 22ஆம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்னும் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று திடீரென அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருப்பது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு திரைப்படம் வெளியாகி குறைந்தது ஒரு மாதம் கழித்து தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே விதிமுறை வகுத்துள்ள நிலையில் இரண்டே வாரங்களில் ’ரிபெல்’ வெளியாகியிருப்பது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ‘ரிபெல்’ படத்தின் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் மற்ற படங்களும் இரண்டே வாரத்தில் ஓடிடியில் ரிலீசானால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பு அடைவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ‘ரிபெல்’ திரைப்படம் திடீரென ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிட்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த விவகாரம் பூதாகரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.