செல்லக்குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக பதிவு செய்த ஜிவி பிரகாஷ்

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

கோலிவுட் திரையுலகின் நடிகர், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி தனது பள்ளிக்கால தோழியும் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தவுடன் கோலிவுட் திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்தனர்.

மேலும் ஜிவி பிரகாஷ் தனது செல்ல மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்ததாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் செல்ல மகளின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ‘இதோ எங்கள் இளவரசி’ என ஜிவி பிரகாஷ் கேப்சன் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் தற்போது ஒன்பது தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவற்றில் பெரும்பாலான படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன என்பதும், லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ’தலைவி’ உள்பட ஒருசில திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து, தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரம்!!!

பீகார் மாநிலத்தின் முசாப்பூர் பகுதியில் 5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

முகமூடியைச் சுத்தப்படுத்துவது எப்படி… சிறந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்!!!

கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுறும் என்று கணிக்க முடியாத அளவிற்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சூர்யா நம் வீட்டு பிள்ளை: ஓடிடி முடிவுக்கு பாரதிராஜா ஆதரவு: 

நடிகர் சூர்யா, தான் நடித்து தயாரித்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்ததை அடுத்து அவரது முடிவுக்கு திரையுலகினர்

தொலைக்காட்சி வழியே கல்வி… கொரோனா காலத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழக அரசு!!!

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பிரபல நடிகைமீது துப்பாக்கிச் சூடு!!! பரபரப்பான பின்னணி!!!

கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரபல நடிகை ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.