இரு சகோதரிகளின் மனவலி: ஆணவக்கொலை குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு

  • IndiaGlitz, [Friday,September 21 2018]

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆணவக் கொலை காரணமாக கெளசல்யா என்ற பெண்ணின் கணவர் சங்கரை அவரது குடும்பத்தினர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கெளசல்யா அனுபவித்த அதே வலியை தற்போது தெலுங்கனா மாநிலத்தில் அம்ருதா என்ற பெண் அனுபவித்துள்ளார். அம்ருதாவின் கணாவரையும் கூலிப்படையினர் ஆணவகொலை செய்தனர். தற்போது அம்ருதா கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் அம்ருதாவை இன்று கெளசல்யா சந்தித்து ஆறுதல் கூறினார். நீதிமன்றத்தில் உங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்றும் ஆணவக்கொலையால் தனது குடும்பத்தினர்களுக்கு தண்டனை கிடைத்தது போல் உங்கள் கணவரை கொலை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்றும் மன உறுதியுடன் இருக்குமாறும் கெளசல்யா கூறியுள்ளார்.

அம்ருதா-கெளசல்யா சந்திப்பு குறித்த செய்தி புகைப்படங்களுடன் இணையதளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: கௌசல்யா அம்ருதா .... இரு சகோதரிகளின் மன வலியை என்னால் மட்டுமல்ல எவராலும் எளிதில் கடந்து செல்ல முடியாது... மனிதம் வளர்ப்போம்.. சாதி மதம் மற்றவை தவிர்ப்போம்..

More News

கருணாசுக்கு தைரியம் இருந்தால் என்னை அடிக்கட்டும்: அதிமுக எம்எல்ஏ சவால்

சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், 'நான் அடிப்பேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பயந்தார்'

கத்துவது, பொய் சொல்வது, அழுவது இதுதான் ஐஸ்வர்யாவின் வேலை: பிக்பாஸ் 1 பிரபலம்

ஐஸ்வர்யாவின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்த்து அவரை திட்டாதவர்களே இல்லை என கூறலாம்.

அடுத்த படத்தில் இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகவுள்ளது. 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' ஆகிய படங்கள் இவற்றில் முக்கியமானது

தலைமறைவான கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள்

சமீபத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில்

நான் அப்படித்தான் கத்துவேன்: முழுசா லூசா மாறிவிட்ட ஐஸ்வர்யா?

பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு எந்த நேரத்தில் ஹிட்லர் டாஸ்க் கொடுத்தார்களோ அதிலிருந்தே அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் கத்தி கத்தி பழக்கமாகி அதுவே தொடர்கதையாகிவிட்டது.