close
Choose your channels

இரு சகோதரிகளின் மனவலி: ஆணவக்கொலை குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு

Friday, September 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆணவக் கொலை காரணமாக கெளசல்யா என்ற பெண்ணின் கணவர் சங்கரை அவரது குடும்பத்தினர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கெளசல்யா அனுபவித்த அதே வலியை தற்போது தெலுங்கனா மாநிலத்தில் அம்ருதா என்ற பெண் அனுபவித்துள்ளார். அம்ருதாவின் கணாவரையும் கூலிப்படையினர் ஆணவகொலை செய்தனர். தற்போது அம்ருதா கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் அம்ருதாவை இன்று கெளசல்யா சந்தித்து ஆறுதல் கூறினார். நீதிமன்றத்தில் உங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்றும் ஆணவக்கொலையால் தனது குடும்பத்தினர்களுக்கு தண்டனை கிடைத்தது போல் உங்கள் கணவரை கொலை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்றும் மன உறுதியுடன் இருக்குமாறும் கெளசல்யா கூறியுள்ளார்.

அம்ருதா-கெளசல்யா சந்திப்பு குறித்த செய்தி புகைப்படங்களுடன் இணையதளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: கௌசல்யா அம்ருதா .... இரு சகோதரிகளின் மன வலியை என்னால் மட்டுமல்ல எவராலும் எளிதில் கடந்து செல்ல முடியாது... மனிதம் வளர்ப்போம்.. சாதி மதம் மற்றவை தவிர்ப்போம்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.