ஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட்: சாக்சி தோனியின் க்யூட் பதிவு

கிரிக்கெட்டின் தல என்று அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி அவர்களின் 39 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று அதிகாலை 12 மணிமுதல் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பிராவோவின் பாடல், பாவனாவின் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் உட்பட ஒரு சில பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தோனியின் அன்பு மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் தோனிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஹாப்பி பர்த்டே ஹாஸ்பண்ட் என்று அவர் தெரிவித்துள்ள இந்த க்யூட் பதிவில் கூறியிருப்பதாவது:

உங்களுடைய பிறந்த தேதி குறிப்பது என்னவெனில் இன்னொரு வருடம் வயதானது, இன்னும் கொஞ்சம் நரைத்தது, இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் மற்றும் இனிமையாக நீங்கள் மாறுவது ஆகும். நீங்கள் ஒரு இனிமையானவர் மற்றும் எங்களுடைய விருப்பத்திற்குரிய பரிசானவர். ஒரு கேக்கை வெட்டி மெழுகுவர்த்தியை ஊதி உங்கள் வாழ்க்கையின் மற்றொரு ஆண்டைக் கொண்டாடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

விஷால் மேனேஜரின் கார் கண்ணாடி உடைப்பு: பெரும் பரபரப்பு

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ரம்யா என்ற பெண் கணக்காளர் 45 லட்சம் ரூபாய் வரை

சன் டிவியுடன் கனெக்சன் ஆனது விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு

சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின் வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்

ஹரியானா  மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புலன் விசாரணையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் கொல்லப்பட்ட போலீசாரின்

திருமணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனின் வெறிச்செயல்

திருமணம் நடக்க இருந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் முன்னாள் காதலனால் கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது