நடிகை சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Thursday,April 28 2016]

சமீபத்தில் வெளியான இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'தெறி' நாயகி சமந்தா இன்று தனது இனிய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
கவுதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயோ' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமான சமந்தா, முதன்முதலில் நாயகியாக அதர்வா அறிமுகமான 'பாணா காத்தாடி' படத்தில் நடித்தார். அதன் பின்னர் மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் நடித்தாலும் சமந்தாவை ரசிகர்களின் மனதில் பதிய வைத்த படம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'நான் ஈ' படம்தான். ஒரு ஈயை காதலனாக ஏற்றுக்கொண்டு, சுதீஷின் வில்லத்தனத்தில் இருந்து தப்பிக்கும் அற்புதமான கேரக்டரில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படத்திற்கு பின்னர் மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தில் நித்யா வாசுதேவன் என்ற கேரக்டரில் நடித்தார். சமந்தா-ஜீவாவின் சிறப்பான நடிப்பு, இளையராஜாவின் இசை, கவுதம் மேனனின் இயக்கம் ஆகியவை குறிப்பிடும்படியாக இருந்தாலும் இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.
இதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் ஆர்வம் காட்டிய சமந்தா அங்கு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் தெலுங்கில் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். இரண்டு வருடங்களுக்கு பின்னர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்திற்காக மீண்டும் தமிழுக்கு வந்தார் சமந்தா. இந்த படம் சுமாராக போனாலும் அடுத்து இளையதளபதி விஜய்யுடன் சமந்தா நடித்த 'கத்தி' சூப்பர் ஹிட் ஆகியதால் தமிழ் இயக்குனர்கள் சமந்தாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
10 எண்றதுக்குள்ள', தங்கமகன்' மற்றும் தெறி ஆகிய படங்களில் சமந்தாவின் நடிப்புக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் தற்போது தமிழிலும் சமந்தா முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
'தெறி' படத்தை அடுத்து வரும் மே 6-ஆம் தேதி வெளிவரவுள்ள சூர்யாவின் '24' படம் சமந்தாவுக்கு மேலும் ஒரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி மேல் வெற்றியை கோலிவுட் திரையுலகில் குவித்து வரும் சமந்தாவுக்கு மீண்டும் ஒருமுறை நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் நாயகி லட்சுமிமேனனா?

தற்போது கோலிவுட் திரையுலகில் மிகவிரைவாக படப்பிடிப்பை முடித்து அடுத்தடுத்து படங்களை வெளியிடும்...

விஜய் ஏற்பாடு செய்த 'தெறி' ஸ்பெஷல் காட்சி யாருக்கு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது...

அஜித்-விஜய் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். விஷால்

சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்...

என்னை விட இதற்கு சரியான ஆளு அஜித் மட்டும் தான் : சூப்பர் ஸ்டார்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், வேதிகா நடிப்பில் பி.வாசு இயக்கிய 'ஷிவலிங்கா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்...

சூர்யாவுக்கு அடுத்து அல்லு அர்ஜுன் தான். '24' விக்ரம்குமார்

'ஆத்ரேயா' உள்பட மூன்று வித்தியாச வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமார்...