close
Choose your channels

அஜித்-விஜய் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். விஷால்

Wednesday, April 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் விஷால் பேசியபோது, "நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் நடிகர்களின் நலனுக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களது உழைப்பிற்கு தலைவணங்குகிறேன்.


நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதிக்கின்றேன். குறிப்பாக அஜித் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகிய அனைவர் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அனைவரையும் சமமாகத்தான் நான் நினைத்து வருகிறேன். மேலும் சங்க நிர்வாகிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அவர்களுடை ஒத்துழைப்புடன் நாங்கள் எங்கள் பணிகளை சிறப்பாக செய்வோம்'என்று விஷால் கூறியுள்ளார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கார்த்தி, 'நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்காக நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.