பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை மாற்றி அமைத்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி அந்த திரைப்படத்தை மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நுணுக்கத்தையும் அறிந்தவர். அவருடைய பிரமாண்டமான விளம்பரம், மற்ற தயாரிப்பு நிறுவனங்களை ஆச்சரியப்பட வைத்தது.

தமிழ் சினிமாவில் முதல் முதலாக ஒரு திரைப்படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்ற உத்தியை கையிலெடுத்தவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தான். இதனையடுத்து தான் பல நிறுவனங்கள் பிரமாண்டமாக விளம்பரம் செய்யும் முறையை கடைபிடித்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. மேலும் இரண்டு படங்களையும் வித்தியாசமாகவும் பிரமாண்டமாகவும் அவர் விளம்பரம் செய்தார் என்பதும் குறிப்பாக ’கபாலி’ திரைப்படத்தின் போஸ்டர்கள் விமானத்தில் ஒட்டப்பட்டு அவை உலகம் முழுவதும் பறந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை தொடர்ச்சியாக தயாரித்த கலைப்புலி எஸ் தாணு, தற்போது தனுஷ் நடித்து வரும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ’வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளரும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்சினிமாவில் கலைப்புலி தாணு அவர்கள் கலைச்சேவை தொடர வேண்டும் என்று இந்த பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

More News

'ஜென்டில்மேன் 2' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்!

கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் 'ஜென்டில்மேன் 2' திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நான் கர்ப்பமானதை சொல்லாததற்கு இந்த சாக்கடை குப்பைகள் தான் காரணம்: சின்மயி

பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததே தெரியாத ரசிகர்கள் திடீரென அவருக்கு குழந்தை பிறந்தது என்ற செய்தியை கேள்விப்பட்டு

லைகா நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த 'டான்'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

விஜய்க்கு அனுப்பிய கடைசி மெசேஜ் இதுதான்: 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான 'மாஸ்டர்' படத்தில் அவருடன் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தான் விஜய்க்கு அனுப்பிய கடைசி மெசேஜ் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள், கெளரவர்கள் யார்: பிரபல இயக்குனரின் சர்ச்சை கேள்வி

திரெளபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் மற்றும் கெளரவர்கள் யார் என பிரபல இயக்குனர் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுப்பியுள்ள நிலையில்