close
Choose your channels

நான் கர்ப்பமானதை சொல்லாததற்கு இந்த சாக்கடை குப்பைகள் தான் காரணம்: சின்மயி

Saturday, June 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததே தெரியாத ரசிகர்கள் திடீரென அவருக்கு குழந்தை பிறந்தது என்ற செய்தியை கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லாததற்கு இதுதான் காரணம் என தனது டுவிட்டர் பக்கத்தில் சின்மயில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்ற செய்தி வெளியானதும் அவருக்கு ஏராளமான நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு சிலர் அவரை கேலியும் கிண்டலும் செய்த நிகழ்வுகளும் நடந்தது. குறிப்பாக ஒரு நெட்டிசன் உங்கள் இரண்டு குழந்தைகளையும் வைரம், முத்து போல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சின்மயி அந்த நபருக்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பல நெட்டிசன்கள் தனது குழந்தைகள் குறித்தும் தன்னை பற்றியும் கேலியும் கிண்டலும் செய்து வருவதை அடுத்து அவர் காட்டமாக ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘நான் குழந்தை பிறந்ததை அறிவித்தவுடன் பல நெட்டிசன்கள் நான் மீடுவில் குறிப்பிட்டிருந்த நபருடன் என்னுடைய குழந்தைகளை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் பெண்ணியம் பற்றி பேசும் மாநிலம், ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் அதிக சாக்கடை குப்பைகள் இருக்கும் மாநிலமும் தமிழகம் தான். அதனால் தான் கர்ப்பமாக இருந்ததை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசவே இல்லை என்று கூறினார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.