ரூ.5 கோடிக்கு வாட்ச்… சுங்கத்துறையிடம் சிக்கிய ஹர்திக் பாண்டியா… நடந்தது என்ன?

டி20 உலகக்கோப்பை போட்டியை முடித்துக்கொண்டு துபாயில் இருந்து இந்தியா திரும்பிய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனை மேற்கொண்டதாகவும் இதில் ரூ.5 கோடி மதிப்பிலான 2 வாட்ச்களை அவரிடம் இருந்து பறிமுதல் செய்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஹர்திக் பாண்டியா நான் கடந்த 14 ஆம் தேதி தாயகம் திரும்பினேன். மேலும் மும்பை விமான நிலையத்திற்கு வந்தவுடனேயே நான் நேரடியாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் சென்று கைக்கடிகாரம் கொண்டு வந்திருக்கும் தகவலை தெரிவித்தேன்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் நான் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோலவும் அதற்கு வரி செலுத்த மறுப்பது போலவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை கேட்டனர். உடனே ஆவணங்களை சமர்ப்பித்தேன். தற்போது அதிகாரிகள் அதற்கான சுங்கவரி மதீப்பீட்டை செய்து வருகின்றனர்.

அவர்கள் மதிப்பீட்டு தொகையைச் சொன்னவுடன் நான் வரியைச் செலுத்தப் போகிறேன். இதனால் நான் சட்டத்தை மீறிவிட்டதாகப் பரவும் தகவல்கள் பொய். அதேபோல நான் கொண்டு கொண்டுவந்த கைகடிகாரத்தின் விலை ரூ.1.5 கோடி மதிப்பிலானது. நான் சட்டத்தை மதிக்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம் ரூ.5 கோடி மதிப்பிலான கைகடிகாரத்தை கொண்டுவந்ததாகக் கூறப்படும் தகவலை ஹர்திக் பாண்டியா மறுத்துள்ளார். மேலும் சட்டத்தை மதிக்கிறேன் என்றும் தான் வாங்கிய கைகடிகாரத்திற்கான வரியை செலுத்தவுள்ளதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார். 

More News

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி: வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா' என்பதும் இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது

திருடர்களிடம் மல்லுக்கட்டிய பிரபல நடிகை.. வாக்கிங் சென்றபோது விபரீதம்!

தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் நடிகை ஒருவரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த செல்போன்

வரிச்சலுகையுடன் திரையரங்குகளில் 'ஜெய்பீம்': முதல்வருக்கு கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர்

'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளித்து திரையரங்குகளில் வெளியிட தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் கர்நாடக அமைச்சர் ஒருவர்

கண்ணாடி டாஸ்க்: சிபி-அக்சராவை கோர்த்துவிட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு 'உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி' என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது

ஒடுக்கப்பட்டவர்களின் குரலை எதிரொலிக்கும் ஜிவி பிரகாஷின் 'ஜெயில்'!

ஒடுக்கப்பட்டவர்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் ஜிவி பிரகாஷின் ஜெயில் படம் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வசந்தபாலன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்த 'ஜெயில்